Hariks Muruga

தமிழ் பேச மறந்திட்ட இந்த கணினி உலகத்தில் என்னை தமிழ் எழுத வைத்தது அவளின் காதல்!

Tuesday, September 02, 2008

ம‌துரை மீனாட்சி ‍- 3


ம‌துரை மீனாட்சி ‍- 1

ம‌துரை மீனாட்சி ‍- 2

என்ன‌து அண்ணாவா? நீ இப்ப‌டி சொல்லுவ‌னு நான் நினைக்க‌வே இல்லை. நீ புத்திசாலினு நினைச்சேன்.

என்ன‌ பார்த்தா உன‌க்கு அண்ண‌ன் மாதிரியா இருக்கு?

ஆமாம் ‍ ச‌ற்று ஆர‌வார‌த்துட‌னே சொன்னாள்.

அடிப்பாவி நீ என‌க்கு அக்கா மாதிரி இருக்க‌. நான் இத‌ ஒத்துக்க‌வே மாட்டேன். ம‌ரியாதையா என்ன‌ த‌ம்பினு ஒத்துக்கோ; சொல்லிட்டேன்.

அவ‌ளுக்கு ஒன்னும் புரிய‌ல‌; க‌ண்க‌ள் ச‌ற்று மிர‌ட்சியாக‌வே காண‌ப்ப‌ட்ட‌ன‌.

ஹ‌லோ! ச‌ரிகா! இந்த‌ உல‌க‌த்துல‌ தானே இருக்க‌‌. கொஞ்ச‌ம் கோலோசா ப‌ழ‌க‌னா போதுமே ஓவ‌ரா திங்க் ப‌ண்ணுவீங்க‌ளே! இப்போ எங்கிட்ட‌ ந‌ல்லா ப‌ல்ப் வாங்க‌னியா. என‌க்கு நீ எப்ப‌வுமே என்னோட‌ கொலீக் தான். ஓகேவா? டைம் ஆச்சு போலாமா?

சாரி சிவா! என்னோட‌ ப்ரென்ட்ஸ் தான் என்ன‌ இப்ப‌டி எல்லாம் பேச‌ வ‌ச்சுட்டாங்க‌.

இட்ஸ் ஓகே! ப்ரென்ட்ஸ்னா பேசுவாங்க‌ தான். அதுக்காக‌ என்ன‌ போய் ச‌ந்தேக‌ ப‌ட்டுடியே ச‌ரிகா!(சிவாஜி ஸ்டைலில் சொல்ல‌ அவ‌ள் சிரித்தே போனாள்.)

இத‌ சும்மா விட‌ போற‌து இல்ல‌. இன்னைக்கு டின்ன‌ர் டிரீட் என‌க்கு கொடுக்க‌னும். ச‌ரியா?

(இந்த‌ பொண்ணுங்க‌ கிட்ட‌ இப்ப‌டி எல்லாம் பிட்ட‌ போட்டாதான் ஏதாவ‌து கிடைக்கும் போல‌. டெம்போ எல்லாம் வ‌ச்சி க‌ட‌த்தி இருக்கோம். ஏதோ கொஞ்ச‌ம் பார்த்து ப‌ண்ணுங்க!)
;)

ச‌ரி! என்னோட‌ ப்ரென்ட‌ கூட்டிட்டு வ‌ர‌லாமா?

நீ தானே பில் பே ப‌ண்ண‌ போற‌. எத்த‌ன‌ பேர‌ வேணும்னாலும் கூட்டிட்டு வா! ;)

அன்று திருவான்மியூரில் உள்ள‌ காரைக்குடி ரெஸ்டார‌ன்டுக்கு செல்வ‌தாக‌ இருந்தார்க‌ள். 6:20 ப‌ஸ்ஸை பிடித்து சிவா த‌ன்னுடைய‌ ரூமிற்கு கிள‌ம்பினான். ச‌ரிகா அவ‌ள் வீட்டிலிருந்து வ‌ருவ‌தாக‌ கிள‌ம்பினாள். 6:20வ‌து ப‌ஸ்ஸில் பெய‌ர் தெரியாத‌ அவ‌ன் தேவ‌தையும் வ‌ந்தாள்.

அட‌ ந‌ம்ம‌ ஆளு. என்ன‌டா இது! எதாவ‌து போன்ல‌ பேச‌னாலாவ‌து எந்த‌ ஊருனு க‌ண்டுபிடிக்க‌லாம். அதுவும் இல்ல‌. அட்லீஸ்ட் ப‌ஸ்ஸ்ல‌ யாரு கூட‌வாவ‌து பேசிட்டு வ‌ந்தாலாவ‌து க‌ண்டு பிடிக்க‌லாம் அதுவும் இல்ல‌. எப்போ தான் க‌ண்டுபிடிக்க‌ற‌து எப்போ தான் நாம‌ பேச‌ற‌து. ஒரு ப‌ல‌மான‌ பெரு மூச்சை ம‌ட்டுமே அவ‌னால் விட‌ முடிந்த‌து.

அப்பொழுது அவ‌ள் செல்பேசி சிணுங்கிய‌து ,‍காக்க‌ காக்க‌ சூர்யா ஜோதிகா ச‌ந்திக்கும் போது வ‌ரும்
அந்த‌ இனிமையான‌ மியுசிக்குட‌ன். அட‌ நாம‌ வ‌ச்சிருக்கிற‌ அதே ரிங்டோன்.

அட‌டா! இது தான் ச‌ரியான‌ ச‌ம‌ய‌ம். அவ‌ எந்த‌ மொழில‌ பேச‌றானு கேப்போம். த‌ய‌வு செஞ்சு இங்கிலீஷ்ல‌ ம‌ட்டும் பேசிடாத‌மா. ச‌ரி ஒட்டு கேக்க‌ற‌து த‌ப்பில்லையா? அதெல்லாம் இல்ல‌ நாம‌ என்ன‌ பேச‌றானா கேக்க‌ போறோம்? எதுல‌ பேச‌றானு தானே கேக்க‌ போறோம்.

ஆஹா! என்ன‌ ஒரு இனிமையான‌ குர‌ல். த‌மிழ்ல‌ பேச‌றா :)

அவ‌ள் குர‌லால‌ த‌மிழுக்கு அழ‌கா இல்ல‌ த‌மிழால‌ அவ‌ள் குர‌லுக்கு அழ‌கானு தெரிய‌ல‌யே. க‌ட‌வுளே ரொம்ப‌ ந‌ன்றி. ச‌ரி இதெல்லாம் க‌ண்டுபிடிச்சு என்ன‌ ப‌ண்ற‌து. அவ‌ளோட‌ நாம‌ பேச‌னும். அவ‌ளுக்கு என்ன‌ பிடிக்க‌னும். ஹூம் இவ்வ‌ள‌வு இருக்கு. ச‌ரி இன்னைக்கு போய் மொக்க‌ய‌ போட்டிட‌னும் ச‌ரிகாவுக்கு.

8 ம‌ணிக்கு சிவா ரெஸ்டார‌ன்டுக்குள் நுழைந்தான். செல்பேசியை எடுத்து, "ஹே! ச‌ரிகா இன்னும் வ‌ர‌ல‌யா? என‌க்கு ப‌ல்ப் குடுத்துடாத‌ம்மா :)"

அட‌ இது என‌க்கு தோணாம‌ போய்டுச்சே. வீட்டை விட்டும் கிள‌ம்பிட்டேன். க‌வ‌ல‌ ப‌டாத‌ வ‌ந்துடுவேன்.

அவ‌ன் ஒரு டேபிலில் காத்திருந்தான். அவ‌னுடைய‌ தேவ‌தையும் அங்கு வ‌ந்தாள். ஆர‌ஞ்சு சுரிதாரில் அந்த‌ அந்தி சூரிய‌னே வ‌ந்தாற் போல‌ ஒரு உண‌ர்வு அவ‌னுக்குள். இவ‌னைப் பார்த்த‌தும் ம‌ண்ணுக்கே உரிய‌ நாண‌ம் புகுந்த‌து; அவ‌ள் முக‌ம் சிவ‌ந்த‌து. என்ன‌ நான் அடிக்க‌டி இவ‌னை பார்க்கிறேன். சீ. ஒரே ப‌ஸ் ஸ்டாப்னா தின‌மும் தான் பார்ப்பேன். ஓவ‌ரா திங்க் ப‌ண்ண‌ தேவையில்லை.

அவ‌ளுடைய‌ முக‌ம் சிவ‌ந்து அவ‌ள் வேறு ப‌க்க‌ம் திரும்பிய‌தும், சிவாவிற்குள் பூக‌ம்ப‌மே வெடித்த‌து. என்ன‌டா இது அவ‌ள் பார்த்து சிரிப்பாள் என்று நினைச்சா இப்ப‌டி ப‌ண்ணிட்டாளே!

"என்ன‌டி நீ இன்னும் வ‌ர‌ல‌யா?"

"2 நிமிஷ‌த்துல‌ அங்க‌ இருப்பேன்." ச‌ரிகா அவ‌ளுடைய‌ ந‌ண்பிக்கு சொன்னாள்.

ஹ‌லோ சேர். ரொம்ப‌ நேர‌ம் வெயிட் ப‌ண்ணிட்டு இருந்தீங்க‌ளா! என்ன‌ ப‌ய‌ங்க‌ர‌ யோச‌னையா இருக்கீங்க‌.

அதெல்லாம் ஒன்னும் இல்ல‌. எங்க‌ ப்ரென்டோட‌ வ‌ர‌ன்னு சொன்ன‌. யாரையும் காணோம்.

இங்க‌ தானே இருக்க‌னு சொன்னா... அதோ அவ‌ தான். அந்த‌ ஆர‌ஞ்சு சுரிதார். ஹே இங்க‌ பாரு.

அவ‌ன் க‌ண்க‌ளை அவ‌னாலேயே ந‌ம்ப‌ முடிய‌வில்லை.

இவ‌ர் தான் "சிவா" என்னோட‌ டீம் மேட்.

சிவா, "திஸ் ஸ் மீனாட்சி. என்னோட‌ ட்ரெயினிங் மேட்". நா உங்க‌ கூட‌ ல‌ன்ச் வ‌ர‌து இவ‌ளுக்கு கோவ‌ம். அதான் இவ‌ளுக்கும் சேர்த்து இன்னைக்கு ட்ரீட். :)

"ஆமாம். என‌க்கு கோவ‌ம் தான். என்னையும் ல‌ன்ச்கு கூப்பிடாம‌ இருந்த‌துக்கு." மீனாட்சி ம‌ன‌துக்குள் நினைத்துக் கொண்டாள்.

"மீனாட்சி" ‍ - ம்ல் தொட‌ங்கி ஹெச் இருந்த‌து ஐல் முடிந்த‌து. க‌ரெக்ட் தான்.

இருவ‌ரும் "ஹை" ம‌ட்டுமே ப‌றிமாறி கொண்டார்க‌ள்.

என்ன‌ ச‌ரிகா! பாய் ப்ரெண்டோட‌ வ‌ருவ‌ன்னு பார்த்தா இப்ப‌டி வ‌ந்திருக்க‌. :)

இவ‌ தானே! எங்கிட்ட‌வே ஏதும் சொல்ல‌ மாட்டா. இவ‌ எங்க‌ கூட்டிட்டு வ‌ர‌ போறா?

மீனாட்சி சொன்ன‌து ச‌ரிகாவிற்கு ஆச்ச‌ரிய‌ம். என்னோட‌வே இந்த‌ அள‌வுக்கு உற்சாக‌மா பேச‌ மாட்டாளே. இன்னைக்கு கொஞ்ச‌ம் பூரிப்போடு தான் இருக்கிறாள்.

இந்த‌ சூப் சூப்ப‌ரா இருக்கு ~ சிவா சொன்ன‌த‌ற்கு மீனாட்சி "அப்ப‌டியா. எங்க‌ நா கொஞ்ச‌ம் டேஸ்ட் ப‌ண்ண‌வா?" என்று கேட்க‌ சிவாவிற்கே கொஞ்ச‌ம் த‌ய‌க்க‌மா தான் இருந்த‌து.

ச‌ரிகா "அடிப்பாவி. ம‌த்த‌வ‌ங்க‌ கை வ‌ச்சாலே அத‌ எடுக்க‌ மாட்ட‌. அவ‌ன் வாய் வ‌ச்சு கொடுக்க‌ற‌த‌ சாப்பிட‌ற‌யா?" ம‌ன‌துக்குள்ளே உறுமினாள்.

ஹே ச‌ரிகா! என்ன‌ பார்க்கிற‌ இந்த‌ சூப் சூப்ப‌ரா இருக்குபா.

(என‌க்கேவா). இல்ல‌ என‌க்கு வேண்டாம்.

சிவா! இங்க‌ சில்லி ப‌ன்னீர் சுப்ப‌ரா இருக்கும். ட்ரை ப‌ண்றீங்க‌ளா?

க‌ண்டிப்பா. நீங்க‌ சொன்னா கேக்க‌ மாட்டேனா?

என‌க்கு ஒரு உண்மை தெரிஞ்சாக‌னும்! என்ன‌ ந‌ட‌க்குது இங்க‌.

எதுவும் இல்ல‌யே, மீன்டாட்சி முந்தி கொண்டாள்.

என்ன‌யும் கொஞ்ச‌ம் பேச‌ விடுங்க‌ :)

அன்று ந‌ட‌ந்த‌து ச‌ரிகாவிற்கு மிக‌ வித்தியாச‌மாக‌ இருந்த‌து. ச‌ரி ச‌ரி ச‌ந்தோஷ‌மா இருந்தா ச‌ரி தான்.

இர‌வு சிவாவை அனுப்பி வைத்து விட்டு,

மீனு குட்டி! சிவாவ‌ முன்னாடியே தெரியுமா?

எங்க‌ ப‌ஸ் ஸ்டாப் தான்பா. அடுத்த‌ நொடியே ப‌தில்

என்ன‌ இன்னைக்கு அப்ப‌டி பேசின?

எப்ப‌டி பேசினேன்? உன்னோட‌ ப்ரெண்டு தானே.. அதான்!

மீனு குட்டி! என‌க்கு உன்ன‌ மூணு வ‌ருஷ‌மா தெரியும் ஓகேவா?

இல்ல‌...அது வ‌ந்து..அது வ‌ந்து..

(தொட‌ரும்)


ம‌துரை மீனாட்சி ‍- 4

10 Comments:

  • At Tuesday, September 02, 2008 9:01:00 PM, Blogger Ramya Ramani said…

    சூப்பருங்க செம்மயா போகுது கதை..

    பஸ் ஸ்டாப்ல ஆரம்பிச்சு ரெஸ்டாரன்ட்ல பேசிட்டாங்களா..வாவ்

    \\அவ‌ள் குர‌லால‌ த‌மிழுக்கு அழ‌கா இல்ல‌ த‌மிழால‌ அவ‌ள் குர‌லுக்கு அழ‌கானு தெரிய‌ல‌யே. \\

    யப்பா..தாங்கலே :P

     
  • At Tuesday, September 02, 2008 10:38:00 PM, Blogger ஜியா said…

    athu vanthu???? :))

     
  • At Wednesday, September 03, 2008 9:05:00 PM, Blogger Divya said…

    கதை சூப்பரா போகுது:)))

    டயலாக்ஸ் எல்லாம் ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு, இயல்பான உரையாடல் சிம்ப்ளி சூப்பர்ப்!!

     
  • At Wednesday, September 03, 2008 9:08:00 PM, Blogger Divya said…

    \\எதுவும் இல்ல‌யே, மீன்டாட்சி முந்தி கொண்டாள்.\\

    மீனாட்சி ....

    ஆங்காங்கே இப்படி சின்ன சின்ன spelling mistakes murugs:)))

     
  • At Wednesday, September 03, 2008 9:09:00 PM, Blogger Divya said…

    \\இந்த‌ சூப் சூப்ப‌ரா இருக்கு ~ சிவா சொன்ன‌த‌ற்கு மீனாட்சி "அப்ப‌டியா. எங்க‌ நா கொஞ்ச‌ம் டேஸ்ட் ப‌ண்ண‌வா?" என்று கேட்க‌ சிவாவிற்கே கொஞ்ச‌ம் த‌ய‌க்க‌மா தான் இருந்த‌து.\\


    :)))
    nice!

     
  • At Wednesday, September 03, 2008 9:09:00 PM, Blogger Divya said…

    next part kaha waitingsssssss.......

     
  • At Thursday, September 04, 2008 7:45:00 PM, Blogger Divyapriya said…

    //மீனு குட்டி//

    :-) :-)
    "மான் குட்டியே, புள்ளி மான் குட்டியே" மாதிரி ஒரு பாட்டு எழுதிடுங்க…;-)

     
  • At Thursday, September 04, 2008 7:46:00 PM, Blogger Divyapriya said…

    @ramya
    //\\அவ‌ள் குர‌லால‌ த‌மிழுக்கு அழ‌கா இல்ல‌ த‌மிழால‌ அவ‌ள் குர‌லுக்கு அழ‌கானு தெரிய‌ல‌யே. \\

    யப்பா..தாங்கலே :P//

    same here :-)

     
  • At Thursday, September 04, 2008 7:47:00 PM, Blogger Divyapriya said…

    கதையில் வரும் வசனங்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப அழகா, இயல்பா இருக்கு...

    ஆனா ஒரு சின்ன suggestion...கதையை சொல்லும் பத்திகள், கதா பாத்திரங்களின் உரையாடல்கள், மனதிற்க்குள் நினைத்துக் கொல்லும் வசனங்கள், இதெல்லாத்தையும் பிரிச்சு பாக்குற மாதிரி, punctuations இருந்தா படிக்கறவங்களுக்கு வசதியா இருக்கும். எப்படியும் மூணு கதா பாத்திரங்கள் மட்டுமே இருப்பதால், கஷ்டம் இல்லாம புரிஞ்சுடுது...இருந்தாலும், இந்த punctuations இருக்க வேண்டிய இடத்துல இருந்தா, கதை பார்ப்பதற்க்கும், படிப்பதற்க்கும் ரொம்ப அழகா இருக்கும்...

    அடுத்த பாகத்துகாக ஆவலுடன் waiting :-)

     
  • At Tuesday, September 09, 2008 9:42:00 AM, Anonymous Anonymous said…

    next part eppo??

     

Post a Comment

<< Home